This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/19 at 05:34
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி

சிங்களமொழி டிவி அலைவரிசையான சுவரணவாஹினி 1997 மார்ச் 16 ஆந் திகதியிலிருந்து ஒளிபரப்புச் சேவையில் ஈடுபட்டுவருகிறது. இவ் அலைவரிசை ஈஏபீ ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டின் கீழ் வருவதோடு, செய்திகள், யதார்த்த நிகழ்ச்சிகள், உரையாடல் நிகழ்;ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இவ் அலைவரிசைதான் நாட்டில் காலை நிகழ்ச்சிகளை முதன்முதலாக ஒளிபரப்புச் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் 2015 ஆம் ஆண்டிலிருந்து ஈஏபீ ஹோல்டிங்ஸ்சின் ஒரு அங்கமான ஈஏபீ ஒளிபரப்பு கம்பனி லிமிட்டட் நிதி சிக்கல்கள் காரணமாக அதன் உரித்தாண்மை மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் பல மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் இலங்கை மத்திய வங்கி ஈஏபீ ஹோல்டிங்சை நிறுவுவதற்கு முன்வந்துள்ளது. தகவலின்மையும் ஈஏபீ குழுமத்தின் உரித்தாண்மையைச் சூழ்வுள்ள தெளிவற்ற தன்மையும் உள்நாட்டு ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈஏபீ யின் வலைத்தளம் மற்றும் ஸ்வர்ணவாஹினி. எல் கே ஆகியன நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ் அலைவரிசையை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இன்னமும் தெளிவின்மை நிலவுகின்றது.

2017 இல் ஈஏபீ ஒளிபரப்பின் சகல பங்குகளும் ரணவக்க ஆரச்சிகே மைக்கேல் அந்தணி த அல்விஸ், எடினதுரவிப்புல த சொய்சா மற்றும் ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் (99.99மூ) ஆகியோருக்கிடையே பகிரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் கொண்டிருந்த பங்குகளின் (39.99மூ) சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு சொத்து முகாமைத்துவ கம்பனியான ப்ளூ சமிதி கேபிடல் லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, ஈஏபீ ஒளிபரப்புக் கம்பனியின் (59.௯௯%)பங்குகள் இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு கம்பனியான பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. எலக்சிஸ் இந்திரஜித் லோவெல் அவர்கள் தான் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரே பங்குதாரராக இருக்கும் அதேவேளை புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட் போர்த்துக்கலைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்நேஷனல் எல்டிஏ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இப்போர்த்துக்கேய கம்பனி லைக்கா மொபைல், லைக்கா மற்றும் லைக்காப் பிழை  ஆகியவற்றின் வியாபாரக் குறியீடுகளுக்குச் சொந்தக்காரராகவுள்ளது. இக்கம்பனி லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச கையடக்க தொலைபேசி வலைப்பின்னலான லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர்களான அல்லிராஜா சுபாகரனோடு இணைக்கப்பட்டுள்ளது. ரணவக்க ஆராச்சிகே மைக்கல் அந்தணி த அல்விஸ் மற்றும் எடினதுரவிப்புல த சொய்சா ஆகியோர் ஒவ்வொரு பங்குகளுக்கு இன்னமும் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடும் என்ற அதேவேளை,ஈ ரி ஐ  பினான்ஸ் லிமிட்டட் இரண்டு பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கக் கூடும். இப்பங்கு கைமாற்றங்கள் தற்போதைய உரித்தாண்மைக் கட்டமைப்பை தீர்மானிப்பதற்காக இடம்பெற்றவையாகையால் ஈஏபீ ப்ரோட்காஸ்டிங் ஒரு வருடாந்த ரிட்டனை சமர்ப்பிக்கவில்லை.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

8.8%

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

ஈ ஏ பி ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி லிமிட்டட்

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13567

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன

குழுமம் / தனி உரிமையாளர்

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free to air

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

1994

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

சுவர்ணவாஹினி தொலைக்காட்சியை நிர்வகிக்கும், ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனம் எதிரிசிங்க குடும்பத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1930 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈ.ஏ.பி ஹோல்டிங்ஸ் லிமிடெட் ( ஈ.ஏ.பி ஒலிபரப்பு நிறுவனத்தின் தாய் நிறுவனம்), ஆரம்பத்தில் நகை அடகு பிடிப்பதில் ஈடுபட்டது. பின்னர், அந்நிறுவனம், தனது கிளைகளை விரிவாக்கி வேறு பல துறைகளில் கவனம் செலுத்தியதுடன், சரவணா பைனான்ஸ் மற்றும் எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (ETI) லிமிடெட் ஆகிய இரு நிதி நிறுவனங்களை ஸ்தாபித்தது. அத்துடன், ஒலிபரப்பு, விருந்தோம்பல், தங்கநகை, மற்றும் திரையரங்கு ஆகியவற்றிலும் ஈடுபட்டது. 1974 ல் ஈ.ஏ.பி எதிரிசிங்க இறந்தபின்னர், அவரின் மனைவி சோயா எதிரிசிங்க 25 தினை நிறுவனங்களை கொண்ட நிறுவனத்தை பொறுப்பெடுத்தார். இவர், லயன்ஸ் கழகத்தின் முதலாவது பெண் ஆளுநராக பதவி வகித்தார்(2003 - 2004). அத்துடன், ஜனசர பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பணி செய்தார். இவர் 2015 ல் இறந்தார். அதன் பின்னர், ஜீவக, நாலக, அசங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் பொறுப்பெடுத்தனர்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான ஆண்டு வருமான அறிக்கையின்படி பிரதான நிறைவேற்று அதிகாரியாக மலேசியாவை சேர்ந்த தோமஸ் மத்தியூ குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

நிதிசார் தகவல்கள்

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

EAP Broadcasting Company Limited No.676 A2, Galle Road, Colombo 3 Tel: +947 534 534 Website: http://www.eapholdings.lk/

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

சிங்களமொழி டிவி அலைவரிசையான சுவரணவாஹினி 1997 மார்ச் 16 ஆந் திகதியிலிருந்து ஒளிபரப்புச் சேவையில் ஈடுபட்டுவருகிறது. இவ் அலைவரிசை ஈஏபீ ஒளிபரப்புக் கம்பனி லிமிட்டட்டின் கீழ் வருவதோடு, செய்திகள், யதார்த்த நிகழ்ச்சிகள், உரையாடல் நிகழ்;ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இவ் அலைவரிசைதான் நாட்டில் காலை நிகழ்ச்சிகளை முதன்முதலாக ஒளிபரப்புச் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் 2015 ஆம் ஆண்டிலிருந்து ஈஏபீ ஹோல்டிங்ஸ்சின் ஒரு அங்கமான ஈஏபீ ஒளிபரப்பு கம்பனி லிமிட்டட் நிதி சிக்கல்கள் காரணமாக அதன் உரித்தாண்மை மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் பல மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் இலங்கை மத்திய வங்கி ஈஏபீ ஹோல்டிங்சை நிறுவுவதற்கு முன்வந்துள்ளது. தகவலின்மையும் ஈஏபீ குழுமத்தின் உரித்தாண்மையைச் சூழ்வுள்ள தெளிவற்ற தன்மையும் உள்நாட்டு ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈஏபீ யின் வலைத்தளம் மற்றும் ஸ்வர்ணவாஹினி. எல் கே ஆகியன நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ் அலைவரிசையை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இன்னமும் தெளிவின்மை நிலவுகின்றது.
2017 இல் ஈஏபீ ஒளிபரப்பின் சகல பங்குகளும் ரணவக்க ஆரச்சிகே மைக்கேல் அந்தணி த அல்விஸ், எடினதுரவிப்புல த சொய்சா மற்றும் ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் (99.99மூ) ஆகியோருக்கிடையே பகிரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் கொண்டிருந்த பங்குகளின் (39.99மூ) சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு சொத்து முகாமைத்துவ கம்பனியான ப்ளூ சமிதி கேபிடல் லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, ஈஏபீ ஒளிபரப்புக் கம்பனியின் (59.௯௯%)பங்குகள் இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு கம்பனியான பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டிற்கு விற்பனை செய்யப்பட்டன. எலக்சிஸ் இந்திரஜித் லோவெல் அவர்கள் தான் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரே பங்குதாரராக இருக்கும் அதேவேளை புளு சமிட் கெப்பிட்டல் மனேஜ்மன்ட் (பிரைவேட்) லிமிட்டட் போர்த்துக்கலைத் தளமாகக் கொண்ட பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்நேஷனல் எல்டிஏ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இப்போர்த்துக்கேய கம்பனி லைக்கா மொபைல், லைக்கா மற்றும் லைக்காப் பிழை ஆகியவற்றின் வியாபாரக் குறியீடுகளுக்குச் சொந்தக்காரராகவுள்ளது. இக்கம்பனி லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச
கையடக்க தொலைபேசி வலைப்பின்னலான லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர்களான அல்லிராஜா சுபாகரனோடு இணைக்கப்பட்டுள்ளது. ரணவக்க ஆராச்சிகே மைக்கல் அந்தணி த அல்விஸ் மற்றும் எடினதுரவிப்புல த சொய்சா ஆகியோர் ஒவ்வொரு பங்குகளுக்கு இன்னமும் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடும் என்ற அதேவேளை,ஈ ரி ஐ பினான்ஸ் லிமிட்டட் இரண்டு பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கக் கூடும். இப்பங்கு கைமாற்றங்கள் தற்போதைய உரித்தாண்மைக் கட்டமைப்பை தீர்மானிப்பதற்காக இடம்பெற்றவையாகையால் ஈஏபீ ப்ரோட்காஸ்டிங் ஒரு வருடாந்த ரிட்டனை சமர்ப்பிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ